Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரிவினைவாதத்தை பேசிவரும் திமுகவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்

ஆகஸ்டு 20, 2019 01:24

சென்னை: காஷ்மீர் விவகாரத்தில் பிரிவினைவாத கருத்தினை பேசிவரும் திமுகவை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலுர்களுக்கான 3 நாள் பயிற்சி சென்னையைடுத்த மாமல்லபுரத்தில் இன்று துவங்கப்பட்டது. இந்நிகழ்வை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் ஜெயக்குமார் துவக்கிவைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், காஷ்மீர் விவகாரத்தில் பிரிவினைவாத கருத்துக்களை திமுக தொடர்ந்து பேசி வருவதால் மத்திய அரசு திமுகவை தடை செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தமிழகத்தில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கபடுவதாக தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் கல்விச்சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் நிதியளிக்க மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்